காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சின்னத்திரை நடிகர் வசந்த் வசி அக்னி நட்சத்திரம், பாரதிதாசன் காலனி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ளார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியிட்டு வந்த நிலையில் கடந்த வாரம் எலிமேனேட் ஆகிவிட்டார். இதனையடுத்து ஊடகங்கள் இவரை வட்டமிட்டு பேட்டியெடுத்து வருகின்றனர். அவ்வாறாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'நான் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு முறையும் போராடி நூலிழையில் தோற்றுவிடுகிறேன். இது என்னுடைய வாழ்வில் பலமுறை நடந்திருக்கிறது. படங்களில் நடிக்க வேண்டும் பல முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
வேலையில்லா பட்டதாரி 2வில் நான் தான் பாலாஜி மோகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. டயலாக் பேப்பரெல்லாம் வாங்கி மனப்பாடம் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் சென்றுவிட்டேன். ஆனால், கடைசி நேரத்தில் சவுந்தர்யா மேடம் என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னார். நானும் சென்றேன். அவருக்கு நான் சின்ன பையனாக இருப்பதாக தோன்றியிருக்கிறது. என்னை மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அன்று ஷூட்டிங் நடக்கவில்லை. நான் வீட்டிற்கு வந்து அழுதேன். கடைசியில் படம் ரிலீஸான போது பார்த்தால் பாலாஜி மோகன் நான் மனப்பாடம் செய்த அதே டயலாக்கை பேசினார். அதை பார்க்கு போது கஷ்டமாக இருந்தது' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.