‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னத்திரை நடிகர் வசந்த் வசி அக்னி நட்சத்திரம், பாரதிதாசன் காலனி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ளார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியிட்டு வந்த நிலையில் கடந்த வாரம் எலிமேனேட் ஆகிவிட்டார். இதனையடுத்து ஊடகங்கள் இவரை வட்டமிட்டு பேட்டியெடுத்து வருகின்றனர். அவ்வாறாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'நான் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு முறையும் போராடி நூலிழையில் தோற்றுவிடுகிறேன். இது என்னுடைய வாழ்வில் பலமுறை நடந்திருக்கிறது. படங்களில் நடிக்க வேண்டும் பல முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
வேலையில்லா பட்டதாரி 2வில் நான் தான் பாலாஜி மோகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. டயலாக் பேப்பரெல்லாம் வாங்கி மனப்பாடம் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் சென்றுவிட்டேன். ஆனால், கடைசி நேரத்தில் சவுந்தர்யா மேடம் என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னார். நானும் சென்றேன். அவருக்கு நான் சின்ன பையனாக இருப்பதாக தோன்றியிருக்கிறது. என்னை மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அன்று ஷூட்டிங் நடக்கவில்லை. நான் வீட்டிற்கு வந்து அழுதேன். கடைசியில் படம் ரிலீஸான போது பார்த்தால் பாலாஜி மோகன் நான் மனப்பாடம் செய்த அதே டயலாக்கை பேசினார். அதை பார்க்கு போது கஷ்டமாக இருந்தது' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.