ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பிருத்திவிராஜ் என்கிற பப்லு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்த்து வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் திடீரென ஷீத்தலும் பப்லுவும் பிரிந்துவிட்டனர். அதை உறுதி செய்யும் வகையில் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர். இதுகுறித்து பல்வேறு வதந்திகள் இப்போது வரை பரவி வரும் நிலையில் ஷீத்தல் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், 'என் கடந்த கால வாழ்க்கை குறித்து பலரும் பல்வேறு விதமாக கேட்கிறீர்கள். பலரும் என் சூழ்நிலை பற்றி தெரியாமல் தவறாக புரிந்து கொள்கிறீர்கள். நானும் பப்லுவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் எதிர்பார்த்தது போல் இருக்கவில்லை. அதனால் இருவரும் பிரிந்திருக்கிறோம். இருவரும் சேர்ந்திருந்தது மகிழ்ச்சியான தருணங்கள். ஆனால், இது பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுங்கள்' என்று கூறியுள்ளார்.