இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா தனக்கு விபத்து ஏற்பட்டபோது உதவிய இளைஞர்கள் குறித்தும் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 'என் மகள் கைக்குழந்தையாக இருக்கும் போது பெரிய விபத்தில் சிக்கினோம். பைபாஸ் சாலை என்பதால் யாரும் உதவிக்கு வரவே இல்லை. எங்களை போட்டோ மட்டும் தான் எடுத்தார்கள். அப்போது ஒரு புது காரில் நான்கு இளைஞர்கள் வண்டிக்கு நம்பர் வாங்க சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தான் எங்களை காப்பாற்றினார்கள். அதில் ஒரு இளைஞன் கவிழ்ந்து கிடக்கும் காரினுள் தலைகீழாக இறங்கி எனது குழந்தையை தூக்கி கொடுத்தான். குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்தது. உடனே நான் கூட்டத்தை கூட பொருட்படுத்தாமல் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது மற்றொரு இளைஞன் துண்டை எடுத்து என் மீது போட்டுவிட்டான். அந்த நால்வரும் உடன்பிறந்த அண்ணன் தம்பி போல் மருத்துவமனையில் எங்களை பத்திரமாக சேர்க்கும் வரை கூடவே இருந்தனர். அதன்பிறகு அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய குழந்தைக்கு காதுகுத்தும் போது அவர்களை தான் மாமாவாக உட்கார வைத்து காதுகுத்த ஆசைபடுகிறேன். அவர்கள் நால்வரையும் எப்படியாவது தேடி கண்டுபிடித்துவிடுவேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.