ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்று வரும் இவர் ஏழை, எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். சமூகபணிகள் பலவும் செய்து வருகிறார். அதோடு சென்னை மழை வெள்ளத்தின்போது கூட பலருக்கு தேடிச் சென்று உதவி செய்தார்.
இந்தநிலையில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாலா, புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் குறித்து பேசியவர், ‛‛குழந்தைகளுக்கு குட் டச்- பேட் டச் என்று சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு, டோன்ட் டச் என்று சொல்லிக் கொடுங்கள். அதுதான் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழியாகும்'' என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அடுத்த மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். என்றாலும் தனது காதலி யார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. இப்படி அவர் திருமண செய்தியை வெளியிட்டதை அடுத்து பலரும் அவருக்கு சோசியல் மீடியா பக்கத்தில் அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.