மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
செய்திவாசிப்பாளரான பாத்திமா பாபு சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முகமாக வலம் வருகிறார். சின்னத்திரைக்கு முன்பாக ஏராளமான படங்களில் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாத்திமா பாபு யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக என்ட்ரி கொடுத்து அசத்தினார். அதன்பின் சீரியலில் அவரை பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பாத்திமா பாபு, 'இன்று - புதிய தெலுங்கு சீரியலில் முதல் நாள்' என்று தனது புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் பாத்திமா பாபுவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.