சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ராதிகா சரத்குமார் தயாரிக்கும் 'கிழக்கு வாசல்' தொடர் அதிக எதிபார்ப்புகளுக்கிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வெங்கட் ரெங்கநாதன், ரேஷ்மா முரளிதரன், அஸ்வினி ராதகிருஷ்ணா, ரோஜா ஸ்ரீ, அருண் குமார் ராஜன், சிந்து ஷ்யாம் ஆகியோருடன் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலானது கிட்டத்தட்ட 30 எபிசோடுகளை தாண்டியுள்ள நிலையில் சொல்லிக்கொள்ளும் அளவில் டிஆர்பியில் முன்னேற்றம் அடையவில்லை.
அதேசமயம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாக உள்ளதால் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல் தொடரை மாலை 4 மணிக்கு ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த சீரியல் குழுவும் அப்செட்டாகி உள்ளனர். அதிலும், சின்னத்திரையில் முதன்முதலாக என்ட்ரி கொடுத்த எஸ்.ஏ.சி இந்த நேர மாற்றத்தால் மிகவும் வருத்தம்டைந்துள்ளதாக தெரிய வருகிறது. இதன்காரணமாக அவர் சீரியலை விட்டு விலகலாம் எனவும் சின்னத்திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.




