சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

இலக்கியா மற்றும் சுந்தரி ஆகிய தொடர்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெய் ஸ்ரீநிவாச குமார். ரசிகர்கள் மத்தியில் ஹீரோ இமேஜை பெற்றுள்ள இவருக்கு தற்போது உண்மையாகவே ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மீனா என்கிற புதிய தொடரில் ஜெய் ஸ்ரீநிவாச குமார் தான் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இலக்கியா தொடரில் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலக்கியா தொடரிலிருந்து ஜெய் ஸ்ரீநிவாச முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம் சுந்தரி தொடரில் ஜெய் ஸ்ரீநிவாசா தொடர்ந்து சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இலக்கியா தொடரில் ஜெய் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி அரவிஷ் நடிக்க உள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி வருகிறது.




