நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் | எங்களுக்குள்ளும் சண்டை வரும், பிரிவை யோசிக்க வைத்துள்ளது : ரம்பா | ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் |
இலக்கியா மற்றும் சுந்தரி ஆகிய தொடர்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெய் ஸ்ரீநிவாச குமார். ரசிகர்கள் மத்தியில் ஹீரோ இமேஜை பெற்றுள்ள இவருக்கு தற்போது உண்மையாகவே ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மீனா என்கிற புதிய தொடரில் ஜெய் ஸ்ரீநிவாச குமார் தான் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இலக்கியா தொடரில் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலக்கியா தொடரிலிருந்து ஜெய் ஸ்ரீநிவாச முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம் சுந்தரி தொடரில் ஜெய் ஸ்ரீநிவாசா தொடர்ந்து சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இலக்கியா தொடரில் ஜெய் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி அரவிஷ் நடிக்க உள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி வருகிறது.