அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பாடகர் கிருஷ்ணா புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்ற போது அங்கு ஈஸ்வர் சக நடிகர்களுடன் இருந்தார். என்னை பார்த்ததும் என்னிடம் வந்து உடனடியாக அங்கிருந்து கிளம்புமாறு மிரட்டியதுடன், என்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளதாக கூறினார். எனக்கும் அவருக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவருடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படியிருக்க உயிர் பயத்தை காட்டும் அளவுக்கு என்னை ஏன் மிரட்டினார் என்று தெரியவில்லை. எனவே, அவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.
மேலும், வயதான அம்மாவுடன் தனியாக வசித்து வருவதால் தனக்கு தக்க பாதுகாப்பு வேண்டியும் போலீஸிடம் கிருஷ்ணா வேண்டுகோள் வைத்துள்ளார்.