ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் |
‛சிதம்பர ரகசியம்', 'தெய்வமகள்' போன்ற ஹிட் சீரியல்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. அண்மையில் நிறைவுபெற்ற தாலாட்டு தொடரிலும் நடிகை ஸ்ருதி ராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த ஜூன் 24 ஆம் தேதியோடு இந்த தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள நடிகர் கிருஷ்ணா, 'நன்றாக ஓடிட்டு இருந்த சீரியலை திடீரென முடித்துவிட்டனர். இது எங்களுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும் என தான் சொல்லியிருந்தனர். பல புது சீரியல்கள் வர இருப்பதால் தான் தாலாட்டு சீரியலை முடித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணாவும், ஸ்ருதி ராஜும் சீக்கிரமே புதிய சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.