மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
‛சிதம்பர ரகசியம்', 'தெய்வமகள்' போன்ற ஹிட் சீரியல்களில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. அண்மையில் நிறைவுபெற்ற தாலாட்டு தொடரிலும் நடிகை ஸ்ருதி ராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கடந்த ஜூன் 24 ஆம் தேதியோடு இந்த தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது.
இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள நடிகர் கிருஷ்ணா, 'நன்றாக ஓடிட்டு இருந்த சீரியலை திடீரென முடித்துவிட்டனர். இது எங்களுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நிச்சயம் சீரியல் ஓடும் என தான் சொல்லியிருந்தனர். பல புது சீரியல்கள் வர இருப்பதால் தான் தாலாட்டு சீரியலை முடித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணாவும், ஸ்ருதி ராஜும் சீக்கிரமே புதிய சீரியலில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.