காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சின்னத்திரையில் ஒருகாலத்தில் மோஸ்ட் பேவரைட் ஜோடி என்றால் அது சரவணன் மீனாட்சியாக நடித்த மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் தான். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அண்மையில் அவர்கள் வாழ்வில் மகிழ்வூட்டும் விதமாக குழந்தை செல்வமும் கிடைத்தது. இந்நிலையில், சீரியல் நடிகர்கள், நடிகைகளுக்கு இடையே தொடர்ச்சியாக பிரச்னையாக ஏற்பட்டு வருவது குறித்து மனம் திறந்துள்ள மிர்ச்சி செந்தில், சீரியல் நடிகைகளை திருமணம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மிர்ச்சி செந்தில் கூறியதிலிருந்து, 'பொதுவாக சீரியலில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரம் போலத்தான் நிஜ கேரக்டரும் இருக்குமென நடிப்பவர்களும் நினைத்து விடுகிறார்கள். ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர்கள் சுயரூபம் தெரியவர பிரச்னை ஆரம்பமாகிறது. இதனால் தான் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் டைவர்ஸ் செய்துவிடுகிறார்கள்.
நானும் கூட அப்படித்தான் ஸ்ரீஜாவை சீரியலில் வரும் மீனாட்சியாக பார்த்துவிட்டேன். பின்பு தான் புரிந்தது நான் மீனாட்சியை கல்யாணம் பண்ணல ஸ்ரீஜாவை கல்யாணம் பண்ணியிருக்கிறேன் என்று. சீரியல் ஸ்ரீஜா வேறு, நிஜ ஸ்ரீஜா வேறு. திருமணத்துக்கு பிறகு வேறுவிதமாக வாழ்க்கை அமைந்தாலும் காதலின் மகத்துவம் புரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்' என்று அட்வைஸ் செய்வது போல் கூறியுள்ளார்.