300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தமிழில் சில சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது செவ்வந்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அந்த திருமணத்தின் மூலம் ஏற்கனவே அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இதனையடுத்து அர்னவை அவசர அவசரமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டு தற்பொது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனியே வசித்து வந்த திவ்யாவுக்கு சீரியல் நடிகர்கள் தான் வளைகாப்பு நிகழ்ச்சிகளை கூட செய்திருந்தனர். இந்நிலையில், திவ்யா தற்போது அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் உருக்கமான பதிவிட்டுள்ள திவ்யா, குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்த படி போட்டோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தாய் சேய் நலமாக இருக்க வேண்டுமென பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.