சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? |
தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு பரிட்சயமானவர் குமரன் தங்கராஜன். அதன் பின் சீரியல் சினிமா என நடிகராக உருவெடுத்தார். தற்போது விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2015ம் ஆண்டிலேயே குமரன் 'இது என்ன மாயம்' என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். எனினும், தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 7 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு அவர் வெள்ளித்திரை கலைஞர்களுடன் இணைந்துள்ளார். ஓடிடி தளத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 'வதந்தி' என்கிற வலைத்தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த வலைத்தொடரின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குமரன் தங்கராஜனும் நடித்துள்ளார். டீசரில் குமரன் தங்கராஜனின் கெட்டப்பை பார்க்கும் போது படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. இதனயடுத்து குமரனின் ரசிகர்கள் பலரும் அவரது திரைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.