அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இதற்கு முன்னதாக அவர் திரையுலகில் சில படங்களில் பணியாற்றி இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் இன்னும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இவர் ஏற்கனவே சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்துகொண்டு, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2012ல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதைத் தொடர்ந்து சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சாண்டிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் முதல் மனைவியான காஜல் பசுபதி சாண்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுடன் சந்தித்து உரையாடியுள்ளார். மேலும் அவர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டு அவற்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அவர்களை சந்தித்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சாண்டியின் இரண்டாவது மனைவி சில்வியாவை டார்லிங் என குறிப்பிட்டு இருவரையும் வாழ்த்தியுள்ளார்.
காஜல் பசுபதியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான். அதேசமயம் சாண்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் விவாகரத்து செய்து இருந்தாலும் எந்த இடத்திலும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் குறை சொல்லி பேசியதில்லை. குறிப்பாக சாண்டியை எந்த இடத்திலும் காஜல் பசுபதி விட்டுக்கொடுத்து பேசியது இல்லை. இந்த நிலையில் அவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்ததுடன் தனது மகிழ்ச்சியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள காஜல் பசுபதியின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.