25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சிறு ரோலில் நடித்திருந்தார். அதன்பின் வேறு சில படங்களிலும் அனிதாவுக்கு சிறு சிறு ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' மற்றும் 'காலங்களில் அவள் வசந்தம்' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்ததாக தெரியவில்லை. இதனையடுத்து அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்துள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மந்திர புன்னகை' என்ற தொடரில் ஹீரோயினுக்கு தோழியாக அனிதா சம்பத் என்ட்ரி கொடுத்துள்ளார். சின்னத்திரையில் அனிதாவுக்கு எப்போதும் வாண்டட் இருந்து கொண்டு தான் இருக்கிறது.