பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகினார். சின்னத்திரை ஜோடிகளில் சஞ்சீவ் - ஆல்யா ஜோடிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள ஆல்யா, இன்ஸ்டாவில் அடிக்கடி எதாவது அப்டேட் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்றுள்ள அவர், தனது மகள் அய்லாவுடன் ஒரு மால் வளாகத்தில் யானை சிலைகளுக்கு முன் நின்று புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை அய்லா, ஆல்யா செய்வது போலவே அழகாக போஸ் கொடுத்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் 'நூலை போல சேலை, தாயை போல பிள்ளை, ஆல்யா போல அய்லா' என பழமொழி சொல்லி கொஞ்சி வருகின்றனர்.