மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஜீ தமிழில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான சீரியல்களில் ஒன்று 'என்றென்றும் புன்னகை'. இதில், நக்ஷத்திரா ஸ்ரீநிவாஸ், கவிதா, நிதின் ஐயர், விஷ்னுகாந்த் மற்றும் சுஷ்மா நாயர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியல், ஹீரோ தீபக் குமார் வெளியேறிய பின் சற்று தடுமாற ஆரம்பித்தது. இதனையடுத்து இந்த சீரியலுக்கான ஸ்லாட் இரவிலிருந்து மதியத்திற்கு மாற்றப்பட்டது. இந்த சீரியல் 565 எபிசோடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது நிறைவு பகுதிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் 'என்றென்றும் புன்னகை' தொடரின் கிளைமாக்ஸ் காட்சி ஒளிபரப்பாகும் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த வருத்ததில் உள்ளனர்.