ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சசிகுமார் நடித்த, ‛சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் சசிகுமார் உடன் இணைந்து இயக்கியுள்ள படம் ‛கொம்பு வச்ச சிங்கம்டா'. நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். இவர்களுடன் மறைந்த இயக்குனர் மகேந்திரனும் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது.
‛இப்பல்லாம எவன் முகத்தாயாவது பார்த்து நல்லவன், கெட்டவன் யாருனு சொல்லிரு பார்ப்போம், இங்க எல்லாரும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க..., இனி இவனுங்களோடதான் நம்ம வாழ்ந்தாகனும்' என்ற இப்படத்தின் வசனம் ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. ‛குத்துனது நண்பனா இருந்தா... செத்தா கூட சொல்லக்கூடாது' என்ற வசனத்தை ரசித்த ‛சுந்தரபாண்டியன்' ரசிகர்கள் கொம்புவச்ச சிங்கம்டா படத்தையும் வரவேற்பர் என்கின்றனர் படக்குழுவினர்.