'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
சசிகுமார் நடித்த, ‛சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் சசிகுமார் உடன் இணைந்து இயக்கியுள்ள படம் ‛கொம்பு வச்ச சிங்கம்டா'. நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். இவர்களுடன் மறைந்த இயக்குனர் மகேந்திரனும் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானது.
‛இப்பல்லாம எவன் முகத்தாயாவது பார்த்து நல்லவன், கெட்டவன் யாருனு சொல்லிரு பார்ப்போம், இங்க எல்லாரும் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க..., இனி இவனுங்களோடதான் நம்ம வாழ்ந்தாகனும்' என்ற இப்படத்தின் வசனம் ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. ‛குத்துனது நண்பனா இருந்தா... செத்தா கூட சொல்லக்கூடாது' என்ற வசனத்தை ரசித்த ‛சுந்தரபாண்டியன்' ரசிகர்கள் கொம்புவச்ச சிங்கம்டா படத்தையும் வரவேற்பர் என்கின்றனர் படக்குழுவினர்.