மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இந்தியத் திரையுலகில் பல்லாயிரம் ஹிட் பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் மரணம் அடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு நாளை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அனுசரித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் எஸ்பிபி பாடல்கள் பலவும் காலை முதல் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் எஸ்பிபி நினைவு தினத்தை அனுசரித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
“நம் மனதில் என்றென்றும் எப்போதும் ஈடு இணையற்ற அவரது தெய்வீகக் குரலால் நிறைந்திருப்பார். எஸ்பிபி சாரை அவரது முதல் நினைவு தினத்தில் நினைவு கூறுகிறேன்,” என்று மோகன்லால் டுவீட் செய்துள்ளார்.
மம்முட்டி, “லெஜன்ட் நம்மை விட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டது. அவரது பெரு மகிழ்ச்சியூட்டுகிற குரல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரை நினைவு கூறுகிறேன்,” என்று டுவீட் செய்துள்ளார்.