தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா |
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 65வது படம். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் வம்சி இரு வேறு பேட்டிகளில் அந்தப் படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் மகேஷ் பாபுவுக்காக வம்சி சொன்ன கதையில் தான் விஜய் நடிக்க உள்ளாராம். வம்சியும், மகேஷ் பாபுவும் இணைந்து 'மகரிஷி' படத்தைக் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு வம்சி சொன்ன கதையை மகேஷ் பாபு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். அதே கதையைத்தான் விஜய்க்குச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார் வம்சி.
தற்போது கதையில் தமிழுக்கேற்றபடி சில மாற்றங்களைச் செய்து, கதாபாத்திரத்திலும் சில மாற்றங்களைச் செய்து மெருகேற்றி வருகிறார்களாம். ஸ்கிரிப்ட் வேலைகள் முழுவதுமாக முடிந்த பின் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். இப்படம் மூலம் தெலுங்கிலும் நேரடியாக நடிக்க உள்ளார் விஜய். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராக உள்ளது.
இப்படத்திற்காக விஜய்க்கு 100 கோடி சம்பளம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழில் ரஜினிக்குப் போட்டியாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் தானாம். அவர் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் அஜித்திற்கு என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.