டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும், வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.
அந்தவகையில் கேரளாவின் அடையாளமாக திகழும் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் சமீபத்தில் கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அதை தொடர்ந்து முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸும் கோல்டன் விசா பெற்றார்.
இந்த நிலையில் தந்தை மம்முட்டியை தொடர்ந்து மகன் துல்கர் சல்மானுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு. இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள துல்கர் சல்மான், “எதிர்காலத்தில் அபுதாபி அரசு சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் இன்னும் அதிக கவனம் எடுத்து திட்டங்களை செயல்படுத்தப் போவதாக கூறியுள்ளனர். அந்தவகையில் வரும் காலங்களில் சினிமா தொடர்பாக அதிக நாட்கள் இங்கேயே செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்