பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

தெலுங்கில் குணசேகரன் இயக்கத்தில் சகுந்தலம் படத்தில் நடித்த முடித்தபிறகு நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுக்கப்போவதாக கூறினார் சமந்தா. அதனால் தமிழில் நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சமந்தா புதிய படங்களில் நடிக்க மாட்டார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஒரு பெண்ணை மையப்படுத்திய கதையில் உருவாகும் இந்த ஸ்கிரிப்ட் சமந்தாவை வெகுவாக பாதித்து விட்டதால் உடனே நடிக்க சம்மதம் கூறிவிட்டாராம். அதனால் நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இப்படத்தை ஸ்ரீதேவி மூவீஸ் கிருஷ்ணபிரசாத் தயாரிக்கிறார்.




