இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
இந்தி படம் பார்க்காதவர்களுக்கு கூட அதிரடியான பேச்சுக்களாலும், நடவடிக்கைகளாலும் நன்கு தெரிந்த முகம் ஆகிவிட்டார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் நடித்துள்ள தலைவி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக இன்று(செப்., 10) வெளியாகி உள்ளது. அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மும்பை, ஐதராபாத், சென்னை என மாறி மாறி கலந்து கொண்டு வருகிறார் கங்கனா.
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா, தனக்கு தெலுங்கில் மீண்டும் நடிப்பதற்கு ஆசையாக இருப்பதாகவும், அதுவும் பிரபாஸுக்கு ஜோடியாக பூரி ஜெகந்நாத் டைரக்சனிலேயே மீண்டும் நடிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பூரி ஜெகந்நாத் டைரக்ஷனில் ஏக் நிரஞ்சன் என்கிற படத்தில் பிரபாஸ் ஜோடியாக கங்கனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.