ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற்றது. அந்த விழாவில் 'சூரரைப் போற்று' படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர் என இரண்டு விருதுகள் கிடைத்தது.
கொரானோ சூழல் காரணமாக விழா நிகழ்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. விருதுகள் வென்ற பிறகு வீடியோ மூலம் சூர்யாவும் நன்றி தெரிவித்துப் பேசினார். அந்த விருதுகள் சூர்யாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விருதுகளை சூர்யா, மனைவி ஜோதிகா, தயாரிப்பாளர் கற்பூர சுந்தர பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து பிரித்தார். அந்த வீடியோவை படத்தைத் தயாரித்த 2 டி நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டது.
இரண்டு விருதுகளை தனது கணவர் வென்றதற்கு ஜோதிகா மிகவும் மகிழ்ந்து தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார். ஓடிடியில் வெளியான படமாக இருந்தாலும் 'சூரரைப் போற்று' படம் ரசிகர்களைச் சென்றடைந்தது. படம் வெளியாகி ஒரு வருடம் ஆகப் போகிறது. இருந்தாலும் இன்னமும் ஓடிடியில் படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் 'சூரரைப் போற்று' படப் பாடலான 'கையிலே ஆகாசம்' பாடல் தன்னைக் கண்ணீர் விட வைத்தாக பாராட்டி எழுதியிருந்தார்.