ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழரசன், காக்கி, அக்னி சிறகுகள், கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. இந்த படங்கள் ஒவ்வொன்றாக ரிலீஸாக உள்ளன. முதலாவதாக கோடியில் ஒருவன் படம் செப்., 17ல் ரிலீஸாகிறது. இந்நிலையில் தான் இயக்கும் தனது முதல் படமான பிச்சைக்காரன் 2 படத்தை நேற்று சென்னையில் தொடங்கினார் விஜய் ஆண்டனி. இவரே இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் செய்கிறார்.
2015ல் சசி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை படம் பிச்சைக்காரன். இப்படத்தை தெலுங்கிலும் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியிட்டனர். அப்படம் தமிழை விட அதிகப்படியாக வசூலித்து தெலுங்கு சினிமாவில் விஜய் ஆண்டனியை பிரபலப்படுத்தியது. அதனால் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு ரசிகர்களையும் கருத்தில் கொண்டு பிச்சைக்காரன் 2 படத்தை உருவாக்க உள்ளார் விஜய் ஆண்டனி. அடுத்தபடியாக ஐதராபாத்திற்கும் சென்று முக்கியவத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்கப் போகிறாராம்.