பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை : 'தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க உழைத்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திரை உலகை காக்கும் வகையில் திரையரங்குகளை திறந்து ஐம்பது சதவிகிதம் இருக்கைகளுடன் இயங்குவதர்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகமெங்கும் உள்ள திரை உலக ரசிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு திரையரங்கை நோக்கி வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக முதல்வர் அவர்களுக்கு தமிழ் திரை உலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வாழ வைக்க வேண்டுமாய் இருகரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்'.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.