பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி சர்வைவர். தனி தீவில் விடப்படும் போட்டியாளர்கள் 100 நாட்கள் காட்டில் தங்கி இருக்க வேண்டும். 100 நாளை நிறைவு செய்யும் போட்டியாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் ஒரு தனித்த தீவில் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்கள் அச்சத்தினை தைரியமாக எதிர்கொண்டு, கடும் சவால்களைக் கடந்து தங்கள் பயணத்தைத் தொடர மேற்கொள்ளும் போராட்டங்களை நேயர்கள் காணலாம். களமிறங்கும் போட்டியாளர்களின் ஆற்றல், தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் ஒரு அசல் போட்டியாக இந்த நிகழ்ச்சி இருக்கும். என்கிறார் அர்ஜூன்.