தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
தெலுங்குத் திரையுலகில் தனி ஸ்டார் அந்தஸ்துடன் இருப்பவர் சிரஞ்சீவி. அங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அதில் களமிறங்கி தெலுங்கு சினிமாவுக்காக தற்போது பல விஷயங்களையும் முன்னெடுத்துச் சென்று வருகிறார்.
தனிக்கட்சி ஆரம்பித்து பின்னர் அதை காங்கிரசுடன் இணைத்து, மத்திய மந்திரியாகவும் பணியாற்றி, அரசியலே வேண்டாமென ஒதுங்கி, தற்போது இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இரண்டு புதிய படங்களை ஆரம்பிக்க உள்ளார். நேற்று கூட தெலுங்குத் திரையுலகத்தின் நலனுக்காக பல தெலுங்கு சினிமா பிரமுகர்கள் சிரஞ்சீவி வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினர்.
தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு சிரஞ்சீவி தீவிர ஆதரவு தருகிறார் என அங்கு சில சர்ச்சை எழுந்தது. கன்னட நடிகரான பிரகாஷ் ராஜை அவர் ஆதரிப்பது தவறு என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே, இன்று பிரகாஷ் ராஜ் ஜிம்மில் சிரஞ்சீவியைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “பாஸ்-ஐ அதிகாலையில் ஜிம்மில் சந்தித்தேன். திரையுலக ஒற்றுமைக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி. எப்போதும் ஊக்கமளிக்கும் அன்னையா (அண்ணன்), அவரைப் பெற்றதில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்,” என்று பாராட்டித் தள்ளியுள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள தேர்தலுக்காகவே இப்படி பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார் என்ற குரல்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.