மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த 10-ந்தேதி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷின் 44ஆவது படமான திருச்சிற்றம்பலத்தில் நடிப்பதற்காக சென்னை வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். அப்போது சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு ஐதராபாத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த பிரகாஷ்ராஜ், ஒரு சிறிய எலும்பு முறிவு என்பதை வெளிப்படுத்தினார். இந்தநிலையில் தற்போது தான் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். அதோடு, வெற்றிகரமான அறுவை சிகிச்சை. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.