மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |
கடந்த 10-ந்தேதி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷின் 44ஆவது படமான திருச்சிற்றம்பலத்தில் நடிப்பதற்காக சென்னை வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். அப்போது சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு ஐதராபாத்திற்கு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்த பிரகாஷ்ராஜ், ஒரு சிறிய எலும்பு முறிவு என்பதை வெளிப்படுத்தினார். இந்தநிலையில் தற்போது தான் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஒரு செல்பியை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ். அதோடு, வெற்றிகரமான அறுவை சிகிச்சை. உங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.