ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திரப் போராட்ட காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான பிரமோஷன்களை படக்குழு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 'நட்பு' என்ற தலைப்பில் ஐந்து மொழிகளில் ஒரு பிரமோஷன் வீடியோவை வெளியிட்டார்கள்.
அடுத்து ஆர்ஆர்ஆர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பொறுப்பை இன்று முதல் ஜுனியர் என்டிஆர் ஏற்றுக் கொள்கிறார். அதில் அவரது பட அனுபவங்களையும், சில தகவல்களையும் அவர் வெளியிட உள்ளார். அடுத்த சில நாட்களுக்கு இது தொடர உள்ளதாம். அதற்கடுத்து ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் அதைச் செய்ய உள்ளார்களாம்.
'பாகுபலி' படத்திற்கு பல புதுவிதமான பிரமோஷன்களைச் செய்து அந்தப் படத்தை 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலைப் பெற்றார்கள். இப்போது 'ஆர்ஆர்ஆர' படத்திற்கு இன்னும் புதிதான பிரமோஷன்களைச் செய்து ரசிகர்களைக் கவர உள்ளார்கள். 'பாகுபலி' படத்தை விட 'ஆர்ஆர்ஆர்' படத்தை அதிக வசூல் ஈட்டச் செய்ய வேண்டும் என்பது படக்குழுவின் அதிகபட்ச ஆசை என்கிறார்கள்.