சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திரப் போராட்ட காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான பிரமோஷன்களை படக்குழு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 'நட்பு' என்ற தலைப்பில் ஐந்து மொழிகளில் ஒரு பிரமோஷன் வீடியோவை வெளியிட்டார்கள்.
அடுத்து ஆர்ஆர்ஆர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பொறுப்பை இன்று முதல் ஜுனியர் என்டிஆர் ஏற்றுக் கொள்கிறார். அதில் அவரது பட அனுபவங்களையும், சில தகவல்களையும் அவர் வெளியிட உள்ளார். அடுத்த சில நாட்களுக்கு இது தொடர உள்ளதாம். அதற்கடுத்து ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் அதைச் செய்ய உள்ளார்களாம்.
'பாகுபலி' படத்திற்கு பல புதுவிதமான பிரமோஷன்களைச் செய்து அந்தப் படத்தை 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலைப் பெற்றார்கள். இப்போது 'ஆர்ஆர்ஆர' படத்திற்கு இன்னும் புதிதான பிரமோஷன்களைச் செய்து ரசிகர்களைக் கவர உள்ளார்கள். 'பாகுபலி' படத்தை விட 'ஆர்ஆர்ஆர்' படத்தை அதிக வசூல் ஈட்டச் செய்ய வேண்டும் என்பது படக்குழுவின் அதிகபட்ச ஆசை என்கிறார்கள்.