மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். அதன்பின் மலையாளம் கன்னடம் என நிறைய படங்களில் நடித்தவர், கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார். அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு கடந்த வருட இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது
தற்போது குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் மேக்னாராஜ். இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, மகன் பிறந்து ஒன்பது மாதம் ஆகிறது. அதை கொண்டாடும் விதமாக மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு நஸ்ரியா உள்ளிட்ட அவரது நெருங்கிய தோழிகள் பலரும் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.