பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழில் 'ஆடுகளம்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தயாரிப்பாளராக மாறியுள்ளார். 'சூர்மா, பிகு' படங்களைத் தாயரித்த பிரஞ்சால் காந்தியா என்பவருடன் இணைந்து இந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
அது பற்றி தன்னுடைய டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “இந்தியத் திரைப்படத் துறையில் நான் இறங்கி கடந்த ஆண்டுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் வழியில் நான் நீந்தக் கற்றுக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியாது. பொதுமக்களிடம் தெரிந்த ஒரு மனிதரா, கனவு காணாத ஒருவருக்கு, என் மீது இத்தனை அன்பையும், என் வேலையின் மீது நம்பிக்கையையும் வைத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி.
இப்போது அதை திருப்பிச் செலுத்துவதற்கான நேரம். அதிக சக்தியுடன் அதிக பொறுப்பும் வருகிறது. சிறந்தவற்றில் சிறந்தவையாக கொடுக்க நான் முயற்சி செய்வேன். வெளியிலிருந்து பார்க்கும் பார்வையே சிறப்பானது. எனது வாழ்க்கையில் மற்றுமொரு அத்தியாயத்தை எழுதுகிறேன். 'அவுட்சைட் பிலிம்ஸ்' மூலம் இப்போது ஒரு தயாரிப்பாகவும் ஆகியுள்ளேன்,”.
இந்த அறிவிப்புடன் கம்பெனியின் லோகோ வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்..