மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் | முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட முக்கியமான நான்கு சங்கங்கள் தான் பரபரப்பாக இயங்கி வருகின்றன. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் கில்டு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என நான்கு சங்கள் தான் அவை. இவற்றோடு டிஆர் ஆரம்பித்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் உள்ளது. இந்த சங்கம் செயல்படுகிறதா இல்லையா என்பது வெளியில் தெரியாமல் உள்ளது.
இவற்றில் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் சில முக்கியமான பெரிய தயாரிப்பாளர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக இந்த சங்கம் தாய் சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவற்றை அந்த சங்கத்தினர் மறுத்துள்ளனர்.
இது குறித்து டுவிட்டர் தளத்தில், “செய்திகள் தவறானவை. எங்கள் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக நாங்கள் தனித்த சங்கமாகத்தான் தொடர்ந்து செயல்படுவோம். அதே சமயம் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரச்சினைகளுக்காக சேம்பர், தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து செயல்படுவோம், ஆனால் நாங்கள் தனித்தே இருப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து தாய் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்தான் முதல்வரை சில முறை சந்தித்துள்ளனர்.