பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றில் தியேட்டர்களைத் திறக்க அந்தந்த அரசுகள் அனுமதி வழங்கிவிட்டன. இருந்தாலும் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி எதுவும் சொல்லாத தயாரிப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தியேட்டர்களைத் திறப்பதில்லை என தியேட்டர்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
அது சம்பந்தமாக நேற்று தெலங்கானா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் பொதுக்குழு கூடியது. ஓடிடி தளங்களில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடக் கொடுப்பதை அக்டோபர் வரையில் நிறுத்த வேண்டும். தியேட்டர்களும் திரையுலகத்தில் ஒருங்கிணைந்த ஒன்று தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கில் சில பெரிய நடிகர்களின் படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த வருடம் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் வந்த போது இங்குள்ள தியேட்டர்காரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது யாரும் அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை.