'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாட்டில் உள்ள பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்களைத் திறக்க ஒவ்வொரு மாநிலமாக சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுமதி வழங்கி வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் ஜுன் 20ம் தேதி முதலே தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்காத காரணத்தால் அங்கு தியேட்டர்களைத் திறக்கவில்லை. இதனிடையே, ஆந்திராவில் ஜுலை 8 முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 5 மணி வரையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தெலுங்குத் திரையுலகினல் தியேட்டர்களைத் திறப்பது பற்றி விவாதிக்க உள்ளனர். ஆந்திராவில் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணங்கள் குறித்த பிரச்சினையும், தெலங்கானாவில் தியேட்டர்களுக்கான சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதும் நிலுவையில் உள்ளன. இது பற்றியெல்லாம் பேசி முடித்த பிறகுதான் தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்வார்களாம்.