கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழைப் போலவே தெலுங்கிலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 2017ல் ஒளிபரப்பான முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், 2018ல் ஒளிபரப்பான இரண்டாவது சீசனை நானி, 2019 மற்றும் 2020ல் ஒளிபரப்பான மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.
தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் முன்னர் ஒத்துக் கொண்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் காரணமாக நாகர்ஜுனா இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்குப் பதிலாக 'பாகுபலி' நடிகர் ராணா டகுபட்டி தொகுத்து வழங்கலாமென தகவல் வெளியாகியுள்ளது. ராணா, இதற்கு முன்பு 'நம்பர் 1 யாரி' என்ற டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் உள்ளவர். மேலும், 'பாகுபலி' புகழும் அவருக்கு உள்ளதால் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என நினைக்கிறார்களாம்.
தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல். விரைவிலேயே 'பிக்பாஸ் சீசன் 5' நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
தமிழில் கூட கமல்ஹாசன் இந்த வருடத்துடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை விட்டு விலகப் போவதாக ஒரு தகவல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.