தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள திரையுலகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றன. தமிழ், தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஜுலை 1 முதல் தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநிலத்தில் 100 சதவீத அனுமதியும், ஆந்திராவில் 50 சதவீத அனுமதியும் வழங்கப்படலாம் என்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தை விட தெலுங்குத் திரையுலகத்தில்தான் பல பிரம்மாண்டமான படங்களை எடுத்து வருகிறார்கள். அவற்றை வெளியிட முடியாமல் கடந்த சில வாரங்களாகவே தத்தளித்து வருகிறார்கள். 50 சதவீத இருக்கை என்றால் கூட தங்களது படங்களை வெளியிட்டு வந்தவரை லாபம் பார்த்துவிட வேண்டும் என அங்குள்ள தயாரிப்பாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்தால்தான் பிரம்மாண்ட படங்களை வெளியிட்டு ஓரளவிற்காவது வசூல் பார்க்க முடியும். இந்த மாநிலங்களில் எப்போது தியேட்டர்களைத் திறப்பார்கள் என்பது சீக்கிரமே தெரிய வரலாம்.