ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் | ''தமிழ் ஐசியூ.,வுல இருக்கு; எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழ்ல பேசுங்க'': செல்வராகவன் வலியுறுத்தல் | நடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ஸ்மிதா | உறவுகளின் மேன்மையைச் சொல்கிறதா 'மெய்யழகன்' டிரைலர் | ரஜினியின் வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு வெளியானது! | பவன் கல்யாண் படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் வெளியீடு | மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்! ஜெயம் ரவி விவகாரத்தில் களம் இறங்கிய பாடகி கெனிஷா!! | அக். 2ல் வெளியாகும் வேட்டையன் பட டிரைலர் | கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி | ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது |
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள திரையுலகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றன. தமிழ், தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஜுலை 1 முதல் தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநிலத்தில் 100 சதவீத அனுமதியும், ஆந்திராவில் 50 சதவீத அனுமதியும் வழங்கப்படலாம் என்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தை விட தெலுங்குத் திரையுலகத்தில்தான் பல பிரம்மாண்டமான படங்களை எடுத்து வருகிறார்கள். அவற்றை வெளியிட முடியாமல் கடந்த சில வாரங்களாகவே தத்தளித்து வருகிறார்கள். 50 சதவீத இருக்கை என்றால் கூட தங்களது படங்களை வெளியிட்டு வந்தவரை லாபம் பார்த்துவிட வேண்டும் என அங்குள்ள தயாரிப்பாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்தால்தான் பிரம்மாண்ட படங்களை வெளியிட்டு ஓரளவிற்காவது வசூல் பார்க்க முடியும். இந்த மாநிலங்களில் எப்போது தியேட்டர்களைத் திறப்பார்கள் என்பது சீக்கிரமே தெரிய வரலாம்.