பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சென்னை தனியார் பள்ளியில் மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் புகாரை அடுத்து அது போன்ற சம்பவங்கள் தங்களுக்கும் நிகழ்ந்ததாக பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் 96, கர்ணன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ள கவுரி கிஷனும் பள்ளியில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவாகரத்தை கேள்விப்பட்டபோது, அடையாறில் நான் படித்த பள்ளியிலும் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்தது ஞாபகத்திற்கு வந்து செல்கிறது. நான் மட்டுமல்ல, என்னுடைய பல தோழிகளுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறியும் கேட்டுள்ளேன். அங்கு படித்தபோது சில ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை சுட்டிக்காட்டி பேசுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது. அவர்களின் குணாதிசயங்கள் பற்றி கேவலமாக பேசுவது என செயல்பட்டுள்ளார்கள். மேலும், மாணவர்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி வீண்வழி சுமத்தியும் வந்தார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பெயர்களை நான் இங்கே கூற விரும்பவில்லை. அதேசமயம் பாதிப்புக்கு ஆளான மாணவிகள் உடனுக்குடன் இதுபற்றி வெளியே தெரியப்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும்.. நமக்கு அடுத்த தலைமுறை மாணவர்களாவது நல்ல ஆரோக்கியாமான சூழலில் பயமில்லாமல் கல்வி கற்கும் சூழல் உருவாகும் என தான் படித்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் கவுரி கிஷன்.