முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் |
தென்னிந்திய நடிகைகளில் தான் அளிக்கும் பேட்டிகளில் மனதில் பட்டதை பளிச் பளிச் என்று சொல்லி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் ஒரு தமிழரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது ஒரு ரசிகர், ஐபிஎல் போட்டி நடந்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் வெற்றி பெற்று கப்பை தட்டிச் செல்லும் என்று கூறி வந்தீர்கள். அப்படியென்றால் வீராட் கோலியைத்தானே உங்களுக்கு பிடிக்கும் என்று ஒரு ரசிகர் ராஷ்மிகாவிடத்தில் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனக்கு பெங்களூரு அணி தான் பிடிக்கும். அதேசமயம், வீராட் கோலியை விட தோனி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திறமையும், மைதானத்தில் அவர் காட்டும் அணுகுமுறையும் தோனியிடத்தில் மிகவும் பிடித்த விசயங்கள்'' என்றார்.