சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
தென்னிந்திய நடிகைகளில் தான் அளிக்கும் பேட்டிகளில் மனதில் பட்டதை பளிச் பளிச் என்று சொல்லி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் ஒரு தமிழரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். இது சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது ஒரு ரசிகர், ஐபிஎல் போட்டி நடந்தபோது ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் வெற்றி பெற்று கப்பை தட்டிச் செல்லும் என்று கூறி வந்தீர்கள். அப்படியென்றால் வீராட் கோலியைத்தானே உங்களுக்கு பிடிக்கும் என்று ஒரு ரசிகர் ராஷ்மிகாவிடத்தில் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ‛‛எனக்கு பெங்களூரு அணி தான் பிடிக்கும். அதேசமயம், வீராட் கோலியை விட தோனி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திறமையும், மைதானத்தில் அவர் காட்டும் அணுகுமுறையும் தோனியிடத்தில் மிகவும் பிடித்த விசயங்கள்'' என்றார்.