கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது சின்னத் திரையிலும் தனி முத்திரையைப் பதித்தவர் நடிகை ராதிகா. தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளிவந்த 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் 1981ல் மே 15ம் தேதி வெளிவந்த 'நியாயம் காவாலி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் வெளிவந்து இன்றுடன் 40 வருடங்கள் ஆகிறது.
கோதண்டராமி ரெட்டி இயக்கிய அந்தப் படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ளார். அப்படம்தான் தமிழில் 1984ம் ஆண்டு மோகன், பூர்ணிமா ஜெயராம் நடிக்க 'விதி' என்ற பெரியல் ரீமேக்காக பெரும் வெற்றியைப் பெற்றது.
தன்னுடைய முதல் படமான 'நியாயம் காவாலி' படம் பற்றி ராதிகா இன்று டுவிட்டரில், “என்னுடைய வாழ்க்கையை வேறு ஒரு பாதையில் மாற்றிய முதல் தெலுங்குப் படம் 'நியாயம் காவாலி'. வாழ்க்கை முழுவதும் நண்பனான சிரஞ்சீவி, கோதண்டராமி ரெட்டி, சாரதா மேடம், தயாரிப்பாளர் கிராந்திகுமார். ஒரு முழு நடிகையாக எப்படி பயணத்தை ஆரம்பிப்பது என்ற விழிப்புணர்வைக் கொடுத்த படம்,” என குறிப்பிட்டுள்ளார்.