'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
அனைத்து பணிகளும் முடிந்து வெளிவர முடியாமல் இருக்கும் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கென்று தனியாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா வேகமாக பரவி வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளர்குளுக்கு உதவும் பொருட்டு நன்கொடை வசூலிப்பது, தயாரிப்பாளர்களின் குடும்ப திருமண செலவு, பள்ளி, கல்லூரி கட்டண செலவுகளை சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தயாரிப்பாளர்களுக்கு உதவ நிதி திரட்டும் பணிக்கு பொருளாளார் சந்திர பிரகாஷ் ஜெயின் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். பதிவு செய்யப்பட்ட படங்களின் தலைப்புக்கு செயற்குழு ஒப்புதல் வழங்கியது. இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மன்னன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.