திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது தமிழில் விஜய்யின் புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸுடன் 'ராதேஷ்யாம்' படத்திலும் நடித்து வரும் பூஜா சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தபின் அதைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி, நான் நன்றாக குணமடைந்துவிட்டேன். முட்டாள் கொரோனாவை அதன் பின் பக்கத்தில் நன்றாக உதைத்துவிட்டேன், கடைசியாக நெட்டிவ் என பரிசோதனையில் வந்துவிட்டது. ஹே...., உங்கள் அனைவரது விருப்பமும் குணப்படுத்தும் ஆற்றலும் அதன் மேஜிக்கை நிகழ்த்திவிட்டது என நினைக்கிறேன். என்றென்றும் நன்றி, பாதுகாப்பாக இருங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே கொரோனா பாதிப்பிலிருந்து நலமடைந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.