நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது தமிழில் விஜய்யின் புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸுடன் 'ராதேஷ்யாம்' படத்திலும் நடித்து வரும் பூஜா சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தபின் அதைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
“உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி, நான் நன்றாக குணமடைந்துவிட்டேன். முட்டாள் கொரோனாவை அதன் பின் பக்கத்தில் நன்றாக உதைத்துவிட்டேன், கடைசியாக நெட்டிவ் என பரிசோதனையில் வந்துவிட்டது. ஹே...., உங்கள் அனைவரது விருப்பமும் குணப்படுத்தும் ஆற்றலும் அதன் மேஜிக்கை நிகழ்த்திவிட்டது என நினைக்கிறேன். என்றென்றும் நன்றி, பாதுகாப்பாக இருங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே கொரோனா பாதிப்பிலிருந்து நலமடைந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.