ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆன்ட்ரியாவும் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சற்றுமுன் அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.
“கடந்த வாரம் எனக்கு கொரானோ பாதிப்பு பாசிட்டிவ வந்தது. என்னை கவனமாகப் பார்த்துக் கொண்ட எனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். இன்னமும் நான் வீட்டில் தனிமைப்படுத்துதலில் தான் இருக்கிறேன். ஆனால், குணமடைந்து வருகிறேன்.
சமூக ஊடகங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தேன். எனக்கு ஓரளவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதாலும், இது போன்ற நெருக்கடியான நேரத்தில் நமது நாடும் இருக்கும் போது என்ன பதிவிடுவது. வழக்கம் போல என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனது இதயத்திலிருந்து பாடுகிறேன், அது எல்லாவற்றையும் சொல்லும் என நம்புகிறேன். பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும், உங்களின் மறுபக்கத்தைப் பார்க்கிறேன்,” என அவரே பாடி பியானோ வாசிக்கும் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.