15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டதில் சிலர் வெற்றி பெற்றார்கள், சிலர் தோல்வியுற்றார்கள். நடிகரான உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளரான அம்பேத்குமார் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். அவர்களோடு தியேட்டர் ஓனர் ஒருவரும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஐடிரீம் என்ற தியேட்டர் ஓனர் மூர்த்தி.
அவர் தோற்கடித்தது ஒரு அமைச்சரை என்பதுதான் ஆச்சரியத் தகவல். அதிமுக அரசில் அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை எதிர்த்து முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார் மூர்த்தி. ஜெயக்குமாருக்கு தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு பல வருடங்களாக இருக்கிறது. அதையும் மீறி மூர்த்தி வெற்றி பெற்றதை அரசியல் பார்வையாளர்கள் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தியேட்டர் ஓனராக பாஜக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் ஓனர் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வத்தின் மகன்.
இவர் திமுக சார்பில் போட்டியிட்ட சேகர் பாபுவை எதிர்த்து போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் சில சுற்றுகளில் முன்னணியில் இருந்த வினோஜ் பின்னர் பின்தங்கினார்.
திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் ஒருவர் தற்போது சட்டமன்றத்தில் இடம் பெற உள்ளார். அவர் மூலம் தங்கள் பிரச்சினைகள் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.