4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' |

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65வது படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் தொடங்கி கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. விஜய் அங்கு சென்றதை அடுத்து ஓரிரு நாட்களில் பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். அதையடுத்து ஆக்சன், டூயட் உள்பட முக்கியமான பல காட்சிகளை அங்கு படமாக்கியிருக்கிறார் நெல்சன்.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் விஜய் 65ஆவது பட யூனிட்டில் உள்ள சிலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதோடு இந்தியாவிலும் கொரோனா அதிகரித்து வருவதால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு படக்குழு சென்னை திரும்பியிருக்கிறது. நேற்று காலை விஜய் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ ஒன்று வைரலானது.
இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் கடைபிடித்து, என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரி சோதனை செய்து கொள்ளுங்கள். நான் நலமுடன் இருக்கிறேன். உங்களது அன்பு, ஆதரவிற்கு நன்றி'' என பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.