ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியை சேர்ந்தவர். ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். தனது பேச்சு திறன் மற்றும் டைமிங் காமெடி சென்சால் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சினிமா நட்சத்திரமாக இருந்தபோதும் எளிய வாழ்க்கையை விரும்புகிறவராக இருக்கிறார். எளிய உடைகள் அணிவது, எல்லோரிடமும் எளிமையாக பழகுவது அவரது வழக்கமாக உள்ளது. "சினிமா நட்சத்திரத்தின் மகள் என்ற கிரீடம் இல்லாமல் என் மகள் மற்ற குழந்தைகளை போலவே இந்த உலகத்தை புரிந்து வளர வேண்டும்" என்று சிவகார்த்திகேயன் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் டவுன் பஸ்சில் தனது மகளுடன் பயணம் செய்திருக்கிறார். அந்த பயணத்தில் அவர் மகளுக்கு சென்னையை சுற்றிக் காட்டியதோடு, அந்த பகுதியில் என்ன மாதிரியான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்ன என்றும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவரது பஸ் பயணத்தை படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது இப்போது வைரலாக பரவி வருகிறது.