ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் புதுமையாக திரைப்பட நட்சத்திரங்கள் தாங்கள் எந்த வாக்குசாவடியில் எத்தனை மணிக்கு ஓட்டளிக்க இருக்கிறோம் என்பதை முன்னதாகவே அறிவித்து விட்டார்கள்.
அஜித் இன்று அதிகாலையிலேயே திருவான்மியூர் குப்பம் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைந்துள்ள ஓட்டுச் சாவடிக்கு ஓட்டளிக்க வந்தார். அஜித்தின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். சிலர் செல்பி எடுக்க முயன்றனர். அஜித் அவர்களை சைகையால் வெளியில் போகச் சொன்னார். பின்னர் வந்த போலீசார் கூட்டத்தை விலக்கி ரசிகர்களை வெளியேற்றி கேட்டை பூட்டினார்கள்.
பின்னர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் காத்திருந்தபோது ஒரு ரசிகர் செல்பி எடுக்க மொபைல் போனுடன் அவர் அருகில் வந்தார். அப்போது அவருடைய போனை பறித்துவிட்டார். அஜித்தின் இந்தச் செயலால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ரசிகரை அழைத்த அஜித், அவரை அருகில் அழைத்து செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு, இதுபோன்ற இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று அறிவுரை கூறினார். ஓட்டளித்து விட்டீர்களா என்று அந்த இளைஞரை கேட்டார். அதற்கு அந்த இளைஞர் இல்லை என்று சொல்வே. முதலில் அந்த கடமையை முடியுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் வெளியில் வந்த அஜித் பொதுமக்கள், ரசிகர்கள் பத்திரிகையாளர்களை பார்த்து சாரி... சாரி... என்று திரும்ப திரும்ப கூறியபடியே கிளம்பிச் சென்றார்.