சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வமாய் ஓட்டளித்து சென்றனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓட்டு போடும் இடத்திற்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை பின்தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் வந்தனர். தொடர்ந்து ஓட்டளித்து விட்டு உதவியாளர் ஒருவரின் பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.
இதனிடையே விஜய் சைக்கிளில் வந்து ஓட்டளித்த விஷயம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. அதோடு தற்போது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட ரூ.100 என்ற நிலையில் உள்ளதால் அதை குறிக்கும் வகையில் மறைமுகமாக பா.ஜ.விற்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிக்கவே விஜய் இப்படி சைக்கிளில் ஓட்டளிக்க வந்ததாக சமூகவலைதளங்களில் செய்தி பரவியது.
![]() |




