ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' |
நடிகர் ராதாரவிக்கும்-பாடகி சின்மயிக்கும் நீண்டகாலமாகவே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, வைரமுத்துவை மீடூ சர்ச்சையில் சின்மயி கொண்டு வதந்தபோது தொடங்கிய இந்த சர்ச்சை காரணமாக சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கினார் ராதாரவி. அதையடுத்து நீதிமன்றத்திற்கு சென்று அந்த பிரச்சினையில இருந்து மீண்டு வந்தார் சின்மயி.
இந்த நிலையில் தற்போது நயன்தாரா-உதயநிதி குறித்து ராதாரவி சர்ச்சையாக பேசியிருப்பதை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவீட் போட்டுள்ளார் சின்மயி. அந்த பதிவில், இந்த மனிதராலும், அவரது பேச்சாலும் நான் ரொம்பவே டயர்டு ஆகி விட்டேன். இதற்கு மேல் என்னால் முடியவில்லை. வெளிப்படையாகவே ஆபாசமாக பேசும் இவரை ஒரு கட்சி எப்படி நட்சத்திர பேச்சாளராக நியமித்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை.
திமுகவின் ஆ.ராசாவாக இருக்கட்டும், ராதாரவியாக இருக்கட்டும் எல்லோருமே மோசமாகவே பேசி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் தான் வாக்களித்து அதிகாரத்தை கொடுத்து விட்டோம் என்று பதிவிட்டுள்ளார் சின்மயி.