சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
அஜித் நடிப்பில் வினோத் டைரக்சனில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த, பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், தற்போது அதே கூட்டணியை வைத்து 'வலிமை' படத்தை தயாரித்து வருகிறார். ஆனால் இவர் அஜித் படங்களின் அப்டேட்டுகளை சரியாக தருவதில்லை என அஜித் ரசிகர்களின் விமர்சனத்திற்கும் ஆளானார். அதனால் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டேடியத்திலும், பிரதமர் வருகையின்போது நடைபெற்ற பேரணியிலும் வலிமை அப்டேட் கேட்கும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் சென்றார்கள். அதன்பின் அஜித் அறிக்கை விட்டு ரசிகர்களை சமாதாப்படுத்தினார். அதோடு மே 1 முதல் வலிமை அப்டேட் வரும் தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார்.
நிலைமை இப்படி இருக்க போனி கபூரோ அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிப்பதற்கு தயாராக உள்ளதாக சூசகமான தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “எங்கள் இருவருக்குமே நல்ல பிணைப்பு இருக்கிறது. அவருடனான இந்த நட்பை அவர் விரும்பும் வரை தொடர விரும்புகிறேன்.. அவரும் அதையே தான் விரும்புகிறார் என்றும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என கூறியுள்ளார்.
ஏற்கனவே ஹெச்.வினோத் டைரக்சனில் அஜித் நேரடியாகவே வலிமை படத்தில் நடிக்க இருந்தார்.. ஆனால் போனி கபூரோ விவரமாக, பிங்க் படத்தின் ரீமேக்கை முதலில் கொண்டு வந்து அஜித் - வினோத் கூட்டணியை சம்மதிக்க வைத்தார். அடுத்ததாக வினோத்தின் ஒரிஜினல் கதையை தற்போது படமாக்கி வருகிறார். அந்தவகையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த போனி கபூர், மூன்றாவதும் ஒரு படத்தை எடுக்க தயாராக இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.