கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்களும் உண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர்களும் உண்டு. ஆனால் கடந்த சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற நடிகர் ஆரி அளவிற்கு இதற்கு முன்னர் தமிழ் பிக் பாஸில் யாரும் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெறவில்லை.
டைட்டிலை வென்ற கையோடு தனது பட வேலைகளிலும், சமூகசேவையிலும் பிஸியாகி விட்டார் ஆரி. அலேகா', 'பகவான்' மற்றும் 'எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்' என ஆரி நாயகனாக நடித்து வரும் மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவை தவிர சமீபத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆரி. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தில் ஆரி போலீசாக நடிக்கிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி வெளியிட்டுள்ள பதிவில், 'விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக' தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த அறிவிப்பு ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஆரியின் அந்த மாஸ் அறிவிப்பிற்காக அவரது ஆர்மியினர் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.